Wednesday, July 22, 2020

சிறைத்தவளே

நண்பர் ஒருத்தருக்காக அவரின் தோழியை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை

முழுநில வடுத்து அமைந்தவள் உனையே

ஆழ்கடல் கடந்து எடுத்ததன் இணையே

காலம் தொடுத்த கணைகளின் வினையே

களைப்பு எடுக்கும், கதிர்முகம் துணையே

சிந்தை சிறைத்துச் சென்றாய் எனையே

சிதறச் செய்வாய் சிகரத் தினையே

                                 - மதன் mat_thoughts 



பொருள்:

முழுநில வடுத்து அமைந்தவள் உனையே

அந்த பெண் பௌர்ணமிக்கு பிறகு பிறந்தவள்

ஆழ்கடல் கடந்து எடுத்ததன் இணையே

ஆழ்கடல் கடந்து எடுக்கும் முத்துக்கு இணையான அழகு கொண்டவள்

காலம் தொடுத்த கணைகளின் வினையே
களைப்பு எடுக்கும், கதிர்முகம் துணையே

தன் வாழ்வில் வரும் கேட்ட காலங்களை சூரியன் போன்ற பொலிவான சிரித்த முகத்துடன் எதிர்கொள்வாள்

சிந்தை சிறைத்துச் சென்றாய் எனையே

எனது சுயநினைவு முழுதும் உன்னிடம் சிறைப்பட்டுவிட்டது

சிதறச் செய்வாய் சிகரத் தினையே

உன் சாதனை சிகரம் தாண்டி பரவும்

No comments:

Post a Comment