Tuesday, July 21, 2020

தாயானவள்



கண் கண்ட முதல்மதி - உன்

கரை காணா உளமடி - கடும்

வெயில் மறக்க மரத்தடி - என்

வேண்டுதல் என் தாய்மடி



நான் இறந்து போயினும் - உனை

நா மறக்க விதியில்லை - எப்

பிறவி நம்மில் இருப்பினும் - இப்

பிறவிக்கோர் இணை இல்லை


                                              - மதன்  mat_thoughts


பொருள்:

கண் கண்ட முதல்மதி - உன்
கரை காணா உளமடி

கெட்ட எண்ணம் இல்லாத உன் மனம் தான் நான் கண்டா முதல் நிலவு

- கடும்
வெயில் மறக்க மரத்தடி - என்
வேண்டுதல் என் தாய்மடி

வெயில் அடிக்கும் பொது அதிலிருந்து தப்பிக்க மரத்தடி தேவைப்படும் அது போல என் கவலைகள் மறக்க எனக்கு என் தாய்மாடி தேவைப்படுகிறது

நான் இறந்து போயினும் - உனை
நா மறக்க விதியில்லை

உன் தாய்ப்பாலின் மூலம் எனக்கு உயிர் கொடுத்தாய் எனவே நான் இறந்து போனாலும் அதனை என் நாக்கு மறக்க ஆண்டவன் எழுதிய வீதியிலே கூட இடம் இல்லை

 - எப்
பிறவி நம்மில் இருப்பினும் - இப்
பிறவிக்கோர் இணை இல்லை

இந்த உலகில் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு வரை பல பிறவிகள் இருக்கிறோம். நாம் எத்தனை முறை பிறந்தாலும் அந்த தாய்மைக்கு இணை ஆக முடியாது

No comments:

Post a Comment