Wednesday, July 22, 2020

சங்கத்தமிழே

பேரொன்றே போதும் பெருமிதமே உருவாய்

வேரொன்றே போதும் வரலாற்றின் வருவாய்

இனஇலக்கணம் தமிழே தரம் தருவாய்

இனிசனி இல்லை இனிதே கரைவருவாய்


                                              - மதன்   mat_thoughts

பொருள்:

பேரொன்றே போதும் பெருமிதமே உருவாய்

சங்கத்தமிழின் என்ற பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு பெருமித உணர்வு உண்டாகும்

வேரொன்றே போதும் வரலாற்றின் வருவாய்

அதன் வரலாற்று ஆழம் தான் தற்போதைய வரலாறுக்கு தேவையான அனைத்தையும் தந்துகொண்டிருக்கிறது

இனஇலக்கணம் தமிழே தரம் தருவாய்

இந்த இனத்திற்கான அடையாளத்தை ஆதாரத்துடன் நீதான் தரவேண்டும் தமிழே

இனிசனி இல்லை இனிதே கரைவருவாய்

இனி கெட்ட காலம் இல்லை, கடலினுள் மூழ்கிய சங்கத்தமிழின் வரலாறு வெளியே வரவேண்டும்

No comments:

Post a Comment