Tuesday, July 21, 2020

ஊர்கூறக் கேளடா



உண்மை உரைப்பதை உயர்வெனக் கொள்ளடா

துன்பம் துயர்தனை தூரத் தல்லடா

நன்மை நிகழும், நடுமனம் கொள்ளடா

உன்நிகர் நீயென உணர்த்திட வாழடா

உத்தமன் நீயென ஊர்கூறக் கேளடா

                                 - மதன்   mat_thoughts


பொருள்:

உண்மை உரைப்பதை உயர்வெனக் கொள்ளடா

உண்மை பேசுவதே வாழ்வில் முக்கியம் என்று வாழ வேண்டும்

துன்பம் துயர்தனை தூரத் தல்லடா

கவலை வாழ்க்கையில் வந்தாலும் அதனை பெரியதாக நினைத்து கவலை படகூடாது

நன்மை நிகழும், நடுமனம் கொள்ளடா

நல்லதே நடக்கும் என்று இருக்க வேண்டும், விருப்பு வெறுப்பு இல்லாத ஒரே நிலையில் உள்ள மனம் வேண்டும்

உன்நிகர் நீயென உணர்த்திட வாழடா

உனக்கு நிகர் நீ மட்டுமே என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்

உத்தமன் நீயென ஊர்கூறக் கேளடா

நீ மிகவும் நல்லவன் என்று ஊர் சொல்ல வேண்டும்

No comments:

Post a Comment