Thursday, July 30, 2020

ஒட்டுண்ணி வகையரா

எனது பார்வையில் மனித இனத்தை பற்றிய ஆதங்கம்


சித்ததன் சொத்தெது மூத்தோர் மொழிந்தனர்

அத்தகை சித்தர்கை அறம்அவை அடைந்தன

எத்திசை தடையில்லை நிறைபுகழ் அடைந்தன

இத்தலை முறைவரை அவைதனை மொழிந்தனர்


அருபெறும் அறிவினை அறமுடன் அளித்து 

பெருமனம் பெருமையை புலமையில் ஒளித்து

வருவன செழிவுற வாழ்வினை கழித்து 

அருளினர் அனுதினம் அகமதை விழித்து


அறிவெனும் அருகடல் அருவிகள் அழிந்தனர்

அறிவிலி அறிவினர் அகம்உள்ள அளவினர்

கறைநிரை மனதினர் புகழ்பெரு நகையினர்

சிறையினில் செழிப்புடன் ஒட்டுண்ணி வகையினர்


புரிவது விடுத்து புலனது கெடுத்து

பரிவினை தடுத்து போரினை தொடுத்து

பகைமை வடித்து பழிதனை குடித்து

பழகுதல் விடுத்து பாரினை நடத்து

                                  - மதன்    mat_thoughts 

No comments:

Post a Comment