Tuesday, July 21, 2020

அவள்


கல்மனதைக் கரைத்திடவே
                   உள்மனதில் ஊற்றெடுப்பாய்

சொல்லினங்கள் சிலிர்த்திடவே
             பேச்சிலே பாடிசைப்பாய்

உன்மனம் வாட்டம் கண்டால்
             மழையை மேகம் வெறுத்திடுமே

புன்முறுவல் புரியக்கண்டால்
              பூவுலகம் வலிந்திடுமே

                                                        - மதன்   mat_thoughts




பொருள்:

கல்மனதைக் கரைத்திடவே
                   உள்மனதில் ஊற்றெடுப்பாய்

கோபம் கொண்ட மனதை கரைத்திட வல்லவள்

சொல்லினங்கள் சிலிர்த்திடவே
             பேச்சிலே பாடிசைப்பாய்

அவள் பேசும் சொற்கள் பாட்டிற்கு இணை

உன்மனம் வாட்டம் கண்டால்
             மழையை மேகம் வெறுத்திடுமே

உன் மனவருத்தம் மேகம் தரும் மழையை நிறுத்தவல்லது

புன்முறுவல் புரியக்கண்டால்
              பூவுலகம் வலிந்திடுமே

உன் மனமகிழ்விற்காக இந்த உலகம் ஏங்குகிறது

No comments:

Post a Comment