Saturday, July 25, 2020

நற்தமிழே

எத்திசை போயினும் இத்தசை துடிக்கும்

பத்தினிப் பதத்தினில் பாரினை வடிக்கும்

அத்துணை அருமை அனைத்தும் படிக்கும்

அத்திரு மனதின் அழுக்கினை குடிக்கும்

முத்தமிழ் பழகிடும் திடம்உனில் வெடிக்கும்

அத்தினம் முதலே பித்தும் பிடிக்கும்


                             - மதன் mat_thoughts


பொருள்:

எத்திசை போயினும் இத்தசை துடிக்கும்

தமிழினை தாய்மொழியாக கொண்டவர்கள் எந்தத்திசை சென்றாலும் அவர்க்ளின் மூலம் தமிழ் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்

பத்தினிப் பதத்தினில் பாரினை வடிக்கும்

ஒரு பத்தினியின் கண்காணிப்பில் ஒருகுடும்பம் எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அந்த அளவுக்கு இந்த உலகை தமிழில் உள்ள கருத்துக்கள் மாற்றி விடும்

அத்துணை அருமை அனைத்தும் படிக்கும்

அத்திரு மனதின் அழுக்கினை குடிக்கும்

தமிழ்மொழியில் உள்ள அணைத்து விஷயங்களையும் படித்து அறிந்தால் அந்த மனதில் இருக்கும் கேட்ட எண்ணங்களை தமிழ் மொழி நீக்கிவிடும்

முத்தமிழ் பழகிடும் திடம்உனில் வெடிக்கும்

அத்தினம் முதலே பித்தும் பிடிக்கும்

தமிழில் உள்ள இயல் இசை நாடகம் மற்றும் அதில் உள்ள நல்ல கருத்துக்களை எல்லாம் கற்று தெரிந்து விட்டால் சராசரி மனிதரின் பார்வைக்கு அவர் பைத்தியம் போல் காட்சியளிப்பார் ஏன்யென்றால் சராசரி மனிதரின் வழக்கை அவ்வளவு மோசம் ஆகிவிட்டது

No comments:

Post a Comment