Saturday, July 25, 2020

வேண்டுகிறேன்

செய்வினை சீர்பெரல் நிகழ்கவே-என்

சொல்அது நிறம்நலம் புகழ்கவே-இச்

சிரம்அதன் கனம்கரைந் திகழ்கவே-என்

சினம்அது இடம்இழந் தகழ்கவே-இச்

சித்துஅதன் பித்துஅது விலகவே-என்

சிவன்அவன் உள்நின்று ஆழ்கவே

                                    - மதன் mat_thoughts 


பொருள்:

செய்வினை சீர்பெரல் நிகழ்கவே 

நம் வாழ்க்கையில் செய்த செயல்களின் விளைவுகள் தீர்ந்து வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டும்

என் சொல்அது நிறம்நலம் புகழ்கவே

நான் பேசும் சொற்கள் நல்ல சொற்களாக அமையவேண்டும் 

இச் சிரம்அதன் கனம்கரைந் திகழ்கவே

இந்த தலைக்கனம் என்பது கரைந்து நல்ல அறிவை பெறவேண்டும்

என் சினம்அது இடம்இழந் தகழ்கவே

என்னுடைய கோவத்துக்கு நான் இடம் தரக்கூடாது

இச் சித்துஅதன் பித்துஅது விலகவே

இந்த உயிரினத்தின் பைத்தியக்கார செயல்கள் விலகவேண்டும்

என் சிவன்அவன் உள்நின்று ஆழ்கவே



மேற்கண்ட அனைத்தையும் வழங்கி என்னுடைய சிவன் என் மனதை ஆழவேண்டும்

No comments:

Post a Comment