பாலகனே!!!
நல்லோர்க்கு நம் தொண்டு - சொல்
நிற்பாரின் வழி கொண்டு - நற்
பண்பாளர் மொழி உண்டு - செல்
பாலகனே பகுத் துண்டு
- மதன் mat_thoughts
பொருள்:
நல்லோர்க்கு நம் தொண்டு
நல்லவர்களுக்கு நம் உதவி போய் சேரவேண்டும்
- சொல்
நிற்பாரின் வழி கொண்டு
சொன்ன சொல் மாறாத மக்களின் வழியை ஏற்றுக்கொண்டு
- நற்
பண்பாளர் மொழி உண்டு
நல்ல குணம் உள்ள மக்களின் அறிவுரைகளை மனதில் ஏற்றிக்கொண்டு
- செல்
பாலகனே பகுத் துண்டு
உன் பாதையில் சம உணர்வு கொண்டு செல் சிறுவனே
No comments:
Post a Comment