Tuesday, July 21, 2020

அகத்தாய்வு


இனத்தினை இனத்தவர் ஆளுதல் மறந்து

இளைஞரின் இருதயம் இருட்டினில் இறந்து

இருப்பதை இழப்பதில் முனைப்புடன் நகர்ந்து

இழந்தவை இருந்ததை அனுதினம் நினைந்து

கடந்தவர் கதைதனின் கருத்தினை உணர்ந்து 

எடுப்பவை தருவினை அறிவினை இழந்து

நடப்பதும், நகைப்பதும் இழிவென தெரிந்து

நகர்வதுஇவ் வாழ்வுறும் விருந்து 

                                        -மதன்  mat_thoughts

பொருள்:

இனத்தினை இனத்தவர் ஆளுதல் மறந்து

ஒரு இனத்தினை அந்த இனத்தை சேர்ந்தவர் தான் ஆழ வேண்டும்



இளைஞரின் இருதயம் இருட்டினில் இறந்து

இளைஞர்களின் அறிவு என்பது அறியாமை மூலம் இருக்கிறது

இருப்பதை இழப்பதில் முனைப்புடன் நகர்ந்து

இருக்கும் வளங்களை இழப்பதில் நாம் நம்மை அறியாமலே ஆர்வமாக செயல்படுகிறோம்

இழந்தவை இருந்ததை அனுதினம் நினைந்து

இழந்தவை இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அர்த்தம் இல்லாமல் அதனை தினமும் நினைத்து கவலைபடுகிறோம்

கடந்தவர் கதைதனின் கருத்தினை உணர்ந்து 
எடுப்பவை தருவினை அறிவினை இழந்து
நடப்பதும், நகைப்பதும் இழிவென தெரிந்து
நகர்வதுஇவ் வாழ்வுறும் விருந்து

நம் வாழ்க்கையில் நம்மை கடந்து செல்பவர்களின் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்திருக்கும். அந்த அனுபவத்தை நாம் கேட்டு அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அதை விட்டுட்டு அவர்களை பார்த்து கேலி செய்வது ஒரு கேவலமான செயல் ஆகும். இவற்றின்படி நாம் நடந்து கொண்டால் அதுதான் நம் வாழ்விற்கு நாம் தரும் நல்ல விருந்து.

No comments:

Post a Comment