Tuesday, August 11, 2020

தவம்

 கானகப் பாணிநின் கண்தனை மூடி

வானகப் பார்வைநின் மனம்தனை நாடி

மனம்அது அடங்க உள்முகம் ஓடி

உனது ள்ளும் விளங்கும் அடிமுடி

                                       -மதன் mat_thoughts


பொருள்:

அடர்ந்த காடு போல் அமைதி நிலைக்கு வந்து உன் கண்களை மூடி பரந்த வானம் போல் உன் மனதின் பார்வையை விரித்து உன் மனமானது ஒரு அமைதி நிலையில் அடங்கிய பின் உன் ஆழ்மனதை நோக்கி அதனை செலுத்தினால் உனது உள்ளத்துக்கு இந்த பிரபஞ்சத்தின் தொடக்கமும் முடிவும் விளங்கும்

No comments:

Post a Comment